கிம்-ஜோங் உன் குறித்து டிரம்பின் அணுகுமுறையில் மாற்றம்?
சரியான சூழ்நிலைகளில் வடகொரிய தலைவர் கிம்-ஜோங் உன்னை சந்தித்தால், தான்அதனை கவுரவமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திங்கள்கிழமையன்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவிக்கையில், ''கிம்-ஜோங் உன்னை சந்திக்கும் சூழல் பொருத்தமாக இருந்தால், நிச்சயமாக நான் அவரைச் சந்திப்பேன். அதனை நான் கவுரவமாகவும் கருதுவேன்'' என்று டொனால்ட் டிரம்ப் மேலும் தெரிவித்தார்.
இதற்கு முந்தைய நாளில், முடிவெடுப்பதில் கிம்-ஜோங் உன் மிகவும் புத்திசாலி என்று டிரம்ப் வர்ணித்தார்.
வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்கள் தொடர்பாக கொரிய பிராந்தியத்தில் அதிகரிக்கும் அழுத்தங்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் கிம்-ஜோங் உன் குறித்து டிரம்ப் இக்கருத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
வடகொரியா சிக்கல்: சர்வதேச நாடுகளுக்கு போப் அழைப்பு
அதிபர் டிரம்பின் கருத்துக்களைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், டிரம்ப் மற்றும் கிம்-ஜோங் உன் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையே ஏதாவது சந்திப்பு நிகழ்வதற்கு முன்னர், வடகொரியா இது தொடர்பாக பல நிபந்தனைகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுவும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கலாம்
திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்தால் கைதான சீன மணமகன்
ஓய்வறியா உழைப்பால் மரணிக்கும் ஜப்பானியர்கள்
திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்
வடகொரிய கடலில் அமெரிக்காவின் புதிய விமானந்தாங்கிக் கப்பல்