செங்குத்தாக மேலெழும்பி சாதனை செய்த டிரீம்லைனர் விமானம்!! விமானப் போக்குவரத்தில் மைல் கல்!!!
பாரீஸ் : மிகப்பெரிய பயணிகள் விமானமான டிரீம்லைனர் போயிங் விமானம், செங்குத்தாக மேலெழும்பி சாதனை படைத்துள்ளது.
போயிங் டிரீம்லைனர் ரக விமானங்கள் அளவில் பெரியவை. 350 பேர் வரை இதில் பயணிக்கலாம். மிகப் பெரிய விமானம் என்பதால், இதை மேலே எழுப்புவதற்கு நீண்ட தூர ஓடுதளம் தேவை.
பறக்கும்போதும், திரும்ப வேண்டும் என்றால நீண்ட தூரம் சென்று தான் திரும்ப முடியும். ஆனால் அண்மையில் போயிங் நிறுவனம், விமானத்தில் சில மாற்றங்களை செய்துள்ளது. விமானத்தின் எடையும் குறைக்கப்பட்டது.
இதையடுத்து இவ்விமானத்தின் செயல்விளக்கம் பாரீசில் செய்து காட்டப்பட்டது. வியட்னாம் ஏர்லைன்சுக்கு சொந்தமான இந்த விமானத்தை இயக்கிய பைலட்டுகள், விமானத்தை கிட்டத்தட்ட செங்குத்தாக மேலேழுப்பி குறைந்த நேரத்தில் அதிக உயரத்தை எட்டினர்.
அதே போல, நீண்ட தூரத்திற்கு சுற்றி செல்லாமல், உடனுக்குடன் விமானத்தை திருப்பிக் காட்டினர். இது அங்கு கூடியிருந்த பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. விமான போக்குவரத்தில் இந்த முயற்சி ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.