சிறுவனை தூக்க முயன்ற கழுகு... காயங்களுடன் தப்பிய சிறுவன்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்ள பூங்கா ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றை பார்க்க வந்த சிறுவனை கழுகு ஒன்று தூக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஜூலை 6-ந் தேதி வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்பிரிங் டெசர்ட் பார்க்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிங் டெசர்ட் பார்க்கில் நிகழ்சி ஒன்று நடைபெற்றது. இதை காண்பதற்காக வந்திருந்த சிறுவனை, கழுகு ஒன்று இறைக்காக தூக்க முயன்றது. வேகமாக பறந்து வந்த கழுகு சிறுவனை, தனது கால்களால் தூக்க முயன்றது. அப்போது அங்கிருந்த மக்கள் கூச்சலிட்டதால், அந்த கழுகு சிறுவனை விட்டுவிட்டுச் சென்றது. இதனால் அந்த சிறுவன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
கழுகிடம் இருந்து தப்பித்த அந்த சிறுவன் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்ததால் பயத்தில் அழுதுள்ளார். இதையடுத்து, சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பம் காரணமாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி உடனே முடிக்கப்பட்டது. அந்த கழுகு சிறுவனை ஒரு சிறிய விலங்கு என கருதி தூக்கிச் செல்ல முயற்சி செய்துள்ளது. இந்த காட்சியை புகைப்படமாக ஒருவர் எடுத்துள்ளார்.