துருக்கியில் கடுமையான நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4 ஆக பதிவு
இஸ்தான்புல்: இன்று அதிகாலையில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் துருக்கியில் , இஸ்தான்புல்லின் ஏஜியன் கடல் பகுதியில் ஏற்பட்டது.கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்தது.
அமெரிக்காவின் புவியியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வின்படி,இந்நிலநடுக்கத்தின் மையப் புள்ளியானது 29 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கில் கோக்செடா என்ற இடத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது துருக்கியின் முக்கிய நகரங்களான இஸ்தான்புல், இஸ்மிர், போலு ஆகிய இடங்களிலும் ஏற்பட்டுள்ளது.இயற்கை பேரிடர் மையத்தின் தலைவரான மூரத் நூர்லு இந்த நிலநடுக்கத்தில் 267 பேர் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.தகவல்களின் அடிப்படையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.மிக அதிகபட்ச நில அதிர்வின் பாதிப்பால்தான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.