For Quick Alerts
For Daily Alerts
Just In
அந்தமானில் 24 மணி நேரங்களில் 3வது முறையாக நிலநடுக்கம்.. சுனாமி பீதியில் மக்கள்
போர்ட்பிளேர்: அந்தமான் தீவில் கடந்த 24 மணி நேரங்களில், 3வது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகளில், இன்று அதிகாலை 2.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில், இது 5.2 என்று பதிவாகியுள்ளது. இதனால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. மக்கள் பீதியடைந்தனர்.
கடந்த 24 மணி நேரங்களில் 3வது முறையாக அங்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை அதிகாலை 5.25 மணிக்கு 4.5 ரிக்டராகவும், மதியம் 12.42 மணிக்கு, 5.2 ரிக்டராகவும் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கம் தொடர்ந்தால் சுனாமி ஏற்படுமோ என்ற பீதி மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
Comments
English summary
On Thursday, an earthquake with magnitude 5.2 on the Richter Scale jolted Andaman Islands at 2.05 am. This is the third quake that jolted the island within 24 hours.
Story first published: Thursday, July 5, 2018, 11:43 [IST]