நள்ளிரவில் திடீரென அதிர்ந்த பாகிஸ்தான்.. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி.. ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சமீப காலமாக நம் அண்டை நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். எனினும் நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications