உன்னையெல்லாம் பெத்தாங்களா.. இல்ல ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா.. அம்மாவையே மெர்சலாக்கிய குட்டி சிங்கம்
குட்டி சிங்கம் ஒன்று தன் தாயை பயமுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கக்குட்டி ஒன்று தனது தாயை பயமுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
'நான் சிங்கம்டா’ என ஹீரோக்கள் படங்களில் டயலாக் பேசுவதைப் பார்த்திருப்போம். காட்டுக்கே ராஜா என்பதாலோ என்னவோ சிங்கங்கள் யாருக்கும், எதற்கும் பயப்படாது என்ற பிம்பம் நம் மனதில் உள்ளது. ஆனால் அது நிஜமல்ல என ஒரு சிங்கக்குட்டி நிரூபித்து விட்டது.
ஸ்காட்லாந்து நாட்டின் ஈடின்பர்க் நகரில் இயங்கி வருகிறது சம்பந்தப்பட்ட குட்டிச்சிங்கம் இருக்கும் உயிரியல் பூங்கா. இதில் ஏகப்பட்ட விலங்குகள், சுற்றுலாப் பயணிகளின் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்கா நிர்வாகிகள் சமீபத்தில் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் ஒரு கூண்டில் ஒரு அம்மா சிங்கமும், இரண்டு குட்டிச்சிங்கங்களும் அமர்ந்திருக்கின்றன. ஒரு குட்டிச்சிங்கம் தாய்க்கு முன்பு அமைதியாக உலா வருகிறது.
ஒன்லி நைட்தான்.. பகலில் இல்லை.. ஹைடெக் வேனை வைத்து ஆட்டம் காட்டிய திருவாரூர் திருடர்கள்
மற்றொரு குறும்புக்கார குட்டிச்சிங்கம், தாய் சிங்கத்தின் பின்பக்கத்தில் பூனை மாதிரி அமைதியாக நடந்து வந்து, அம்மாவை அதிரடியாக தாக்கி பயமுறுத்துகிறது. இதனால் பதறிப்போகும் தாய் சிங்கம், அதிர்ந்து போய் எழுகிறது. பின்னர் 'அடக் கொய்யாக்கா நீ தானா' என தனது குட்டியை பார்த்து ஆசுவாசமடைகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏகப்பட்ட பேர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளனர். மேலும், குட்டிச்சிங்கத்தின் செயலை பார்த்து பார்த்து சிலாகிக்கின்றனர்.
பயமுறுத்திய குட்டி மட்டுமல்ல, அந்த மூன்று சிங்கக்குட்டிகளுமே சேட்டை பிடித்த சிங்கக்குட்டிகள் தானாம். தினமும் அவைகள் அடிக்கும் லூட்டி கொஞ்ஸம் நஞ்சமல்ல என்கிறார்கள் அங்கிருக்கும் பாதுகாவலர்கள்.
இவர்கள் தினமும் அடிக்கும் லூட்டி கூண்டில் இருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. பாவம் அந்த அம்மா சிங்கம்.