சவுதியில் நாளை முதல் 3 நாட்கள் நடக்கும் கல்வி கருத்தரங்கம்
சவுதி: கல்வியாளர் சி.எம்.என். சலீம் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் சவுதியில் நாளை முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும், தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கத்தின் தலைவரும், வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான சி.எம்.என். சலீம் கலந்து கொள்ளும் கல்வி கருத்தரங்கம் சவுதியில் நடைபெறுகிறது.
நாளை துவங்கும் இந்த கருத்தரங்கம் வரும் 10ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். கருத்தரங்கம் சவுதியின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல்கோபர்(8ம் தேதி), ராக்கா(தம்மாம்)(9ம் தேதி) மற்றும் ஜுபைல்(8ம் தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
இஸ்லாமிய சமுதாயம் என்னவாக உருவாக வேண்டும் என்ற தலைப்பில் சலீம் அவர்கள் சிறப்புரயாற்ற உள்ளார். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய 059 854 1936, 059 310 1733, 050 808 9035 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.