For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி

Google Oneindia Tamil News

கிளிநொச்சி: இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் கறுப்பு உடையுடன் பிரமாண்டமான தீச்சட்டிகள் பேரணியை நடத்தினர்.

இலங்கையில் யுத்தத்தின் போது காணாமல் போன தமிழர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இந்த காணாமல் போனவர்களை மீட்டு தரக் கோரி 4 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

Eelam Tamil Families of Disappeared hold Fire March in Kilinochchi

இந்த போராட்டத்தின் 5-வது ஆண்டை முன்னிட்டு கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது. கறுப்பு உடையில் நூற்றுக்கணக்கான பெண்கள் தீச்சட்டி ஏந்தி பிரமாண்ட பேரணி நடத்தினர்.

திருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டிதிருகோணமலை எரிபொருள் சேமிப்பு கிடங்கு விவகாரம்.. இந்தியாவுடன் மோதல் இல்லை- இலங்கை திடீர் பல்டி

கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்பாக கண்களில் கறுப்பு துணியை கட்டிக் கொண்டு மண்டி போட்ட நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளையும் பெண்கள் ஏந்தி இருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறும் சூழ்நிலையில் பெண்களின் தீச்சட்டி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil Families of Disappeared hold Fire March in Kilinochchi today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X