விமான சேவையை சீக்கிரம் தொடங்கனும்னா இதுதான் ஐடியா.. எமிரேட்ஸ் அசத்தல்
அபுதாபி: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியா மட்டுமில்லை, உலகின் பல நாடுகளிலும் உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் செயல்படவில்லை.
லாக்டவுனை நீட்டித்து பார்த்தும், கொரோனா முழுசாக ஒழிந்தபாடில்லை. இந்த நிலையில்தான், எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம், தனது விமானங்களை இயக்கலாம் என திட்டமிட்டுள்ளது.
இதற்காக விமான பணியாளர்களுக்கான டிரஸ் கோட் அறிமுகம் செய்துள்ளது. மருத்துவ பணியாளர்களை போல முழுக்க உடலை மறைக்க கூடிய PPE எனப்படும், பாதுகாப்பு உபகரணங்கள் அணியும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆடையுடனான பணிப் பெண்கள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. உடனடியாக விமானச் சேவையை துவங்க விரும்பும் விமான நிறுவனங்கள், இப்படித்தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.
பயணிகள் தள்ளித் தள்ளி அமர வைக்கப்பட்டு, அந்த டிக்கெட் இழப்பை ஈடுகட்ட, கட்டணத்தை உயர்த்தி.. இப்படி ஏதாவது செய்துதான் விமானங்களை இயக்க வேண்டி வரும் என தெரிகிறது. அதற்கு எமிரேட்ஸ், முதல் ஸ்டெப் எடுத்து வைத்துள்ளது.