பீச்சில்.. பட்டப் பகலில்.. எல்லார் முன்னாடியும்.. ஆஸி ஆணும், இங்கிலாந்து பெண்ணும்... "கசமுசா"!
பீச்சில் பொதுமக்கள் முன்னிலையில் உறவு கொண்டுள்ளது ஒரு ஜோடி
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு அக்கப் போர் நடந்துள்ளது. அதாவது பட்டப் பகலில் பலரும் கூடியிருந்த கடற்கரையில், செக்ஸ் வைத்துக் கொண்டதற்காக இங்கிலாந்துப் பெண்ணையும், ஆஸ்திரேலியாவைச் சேரந்த ஆணையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் கைது செய்தும் கூட போலீஸ் வேனுக்குப் பின்னால் போய் இருவரும் கூடி கும்மியடித்ததால் போலீஸார் அதிர்ச்சியாகி விட்டனர்.
அந்த ஜோடியின் பெயர் ஜாஸ்மின் நெல்லி மற்றும் அந்தோணி கேரியோ.. இருவருக்கும் 26 வயது இருக்கும். இருவரையும் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்து, கையில் காப்பு போட்ட பிறகும் கூட இருவரும் விடாமல் விளையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களின் அக்கப் போரை கடற்கரைக்கு வந்தோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
கடற்கரை
இந்த சம்பவம் நடந்தது அக்லான் மாகாணத்தில் உள்ள புகழ் பெற்ற பொராகாய் தீவு ஆகும். இது மிகவும் பிரசித்தி பெற்ற தீவு. இங்குள்ள கடற்கரை பிரபலமானது. அதனால் வழக்கமாக இங்கு குடும்பத்துடன் பலரும் வந்து செல்வார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருவார்கள். இயற்கை எழிலை மகிழ்ச்சியுடன் கண்டு களிப்பார்கள்.
உறவு
இங்கு வியாழக்கிழமை மாலை 5.45 மணிக்கு ஜாஸ்மின் ஜோடி வந்துள்ளது. கடற்கரை மணலில் வைத்தே இருவரும் உறவை ஆரம்பித்தனர். இதைப் பார்த்து அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸாருக்கும் தகவல் கிடைத்து விரைந்து வந்து " குழந்தைங்கெல்லாம் பீச்சுக்கு வந்திருக்காங்க.. இதெல்லாம் செய்யக் கூடாது. நிறுத்துங்க" என்று கூறி இருவரையும் பிரித்து கைது செய்து கையில் காப்பும் போட்டனர்.
கழன்று கிடந்தது
ஆனால் நல்ல போதையில் இருந்த இந்த ஜோடிக்கு எதுவும் காதில் ஏறவில்லை. கைது செய்து போலீஸ் வேனில் அமர வைக்க போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது வேனுக்குப் பின்னால் இருவரும் போய் மீண்டும் வேலையை செய்ய ஆரம்பித்தனர். அந்தப் பெண்ணின் மேலாடை முற்றிலும் அவிழ்ந்து கிடந்தது. அந்த ஆணின் கீழாடை கழன்று கிடந்தது.
ஜாமீன்
இதைப் பார்த்த போலீஸார் அரும்பாடு பட்டு இருவரையும் பிரித்தனர். இந்த கசமுசா களேரபத்தைப் பலரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். பின்னர் இருவரும் போலீஸார் அங்கிருந்து ஒரு வழியாக கொண்டு சென்றனர். அவர்களை தற்போது ஜாமீனில் விடுவித்தனர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து தற்போது அந்த ஜோடி ஊரை விட்டுப் போய் விட்டதாம்.