2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி தேர்வு
ஸ்டாக்ஹோம்: 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அகமது அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டுக்கான இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட பல பிரிவுகளில் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டோர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அகமது அலி, அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்டை நாடான எரித்தியாவுடன் எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டதால் அபிய் அகமது அலிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
BREAKING NEWS:
— The Nobel Prize (@NobelPrize) October 11, 2019
The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2019 to Ethiopian Prime Minister Abiy Ahmed Ali.#NobelPrize #NobelPeacePrize pic.twitter.com/uGRpZJHk1B