50 வயது நர்சுடன் காதலில் விழுந்த 90 வயது முன்னாள் சர்வாதிகாரி: விவாகரத்துக் கோரும் 84 வயது மனைவி
வார்சா: தனது 90 வயது கணவர் அவருடைய 50 வயது நர்சுடன் தவறான தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறி விவாகரத்து கோரியுள்ளார் போலந்து நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான வோஜ்சீக்கின் மனைவி பார்பரா.
போலந்தின் ராணுவ சர்வாதிகாரியாகவும், இறுதி கம்யூனிஸ்ட் தலைவராகவும் இருந்தவர் வோஜ்சீக் ஜாருஜில்ஸ்கை. தற்போது இவருக்கு 90 வயதாகிறது. வோஜ்சீக்கைக் கவனித்துக் கொள்வதற்காக நியமிக்கப் பட்டுள்ள நர்ஸ் டோராடா (வயது 50).
இந்நிலையில், வோஜ்சீக் மற்றும் டோராடாவுக்கு இடையே தகாத உறவு உள்ளது என்றும், அதனைத் தான் கண்டு பிடித்து விட்டதாகவும் கூறி விவாகரத்துக் கோரியுள்ளார் அவரது மனைவி.
நேரில் பார்ட்டர்பில் இருப்பதாக கூறபட்டது இந்த் நிலையில் போர்வைக்குள் மறைத்து செக்ஸ் உறவு வைத்து கொண்ட போது வோஜ்சீக் மனைவி பார்பரா கண்டு பிடித்துவிட்டார்.இதை தொடர்ந்து தற்போது அவர் தனது கணவ்ரிடம் இருந்து விவாகரத்து கோரி உள்ளார்.
இதுகுறித்து போலந்து பத்திரிகை ஒன்றுக்கு பார்பரா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :-
50 வயது நர்ஸ்....
டோராடாவுக்கு 50 வயது இருக்கும்.இவர் வோஜ்சீக்கிடம் 5 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு மணிக்கண்க்கில் ஊதியம் வழங்கப்படுகிறது. அவர் தினச் சம்பளம் அடிப்படையிலேயே வருவார்.
கணவரின் மயக்கம்....
எனது கணவர் இந்த பெண் மூலம் மயக்கபட்டு உள்ளார். நான் 4 மாதங்களுக்கு முன்பே எனது வக்கீல் மூலம் கடிதங்களை தயார் செய்து விட்டேன்.
விவாகரத்து....
என் கணவர் அந்த பெண்ணிடம் இருந்து விடுபடவில்லை. எனவே நான் விவகாரத்து கோர நீதி மன்றம் செல்வேன்..
அருவெறுப்பானது....
டோராடா செய்தது மிகவும் அருவெறுப்பானது. அவர் தனது வறுமையை மிகைப்படுத்தி எனது கணவரின் பென்சனை அபகரித்து உள்ளார்' என இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.