For Daily Alerts
Just In
பிலிப்பைன்ஸில் உணவகத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்.. பீதியில் சுற்றுலா பயணிகள்
மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள உணவு விடுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஃபிலிபினோ என்ற பிரபல உணவு விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதிக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த முகமூடி அணிந்த தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த அந்நாட்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இத்தாக்குதலில் காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
Comments
English summary
The popular tourist resort World Manila is on lockdown after reports of gunfire and explosions.