செய்திகளுக்கு 'நோ' சொன்ன பேஸ்புக்.. நூதனமாக பணம் சம்பாரிக்க மார்க் போட்ட திட்டம்!
இனி பேஸ்புக் டைம்லைனில் செய்திகள் மற்றும் விளம்பரங்கள் மிகவும் குறைவாக வரும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: பேஸ்புக் டைம்லைனில் பொதுவாக நம் நண்பர்களின் போஸ்டுகள் மட்டும் இல்லாமல் நாம் லைக் செய்து இருக்கும் பக்கங்களின் போஸ்டுகளும் வரும். அதேபோல் விளம்பரங்களும் வரும்.
இனி முதற்கொண்டு இந்த பேஜ்களின் போஸ்டுகள் மிகவும் குறைவாகவே வரும் என்று பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது. மக்களை பேஸ்புக்கில் அதிக போஸ்டுகள் போட வைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
ஆனால் இதற்கு பின் பெரிய வியாபார தந்திரம் ஒளிந்து இருக்கிறது. நூதனமாக பணம் சம்பாரிக்கும் மார்க்கின் பலே திட்டம் அம்பலம் ஆகி உள்ளது.
என்ன மாற்றம்
கடந்த சில நாட்களாக பேஸ்புக்கில் தொடர்ந்து நிறைய அப்டேட்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.பேஸ்புக்கின் மொபைல் ஆப்களில் ஏற்கனவே பேஸ்புக் பேஜ்களுக்கான தனி டைம் லைன் இருக்கிறது. ஆனால் யாரும் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் தற்போது பேஸ்புக் டைம்லைனில் வரும் பேஜ்களின், செய்தி நிறுவனங்களின் போஸ்டுகள் நியூஸ் பீடில் குறைவாக தெரியும்படி மாற்றப்பட உள்ளது.
காரணம் என்ன
பேஸ்புக்கில் இருக்கும் மக்களுக்கு இந்த விளம்பரமும், செய்திகளின் போஸ்டுகளும் அதிக தொல்லையாக இருக்கிறது. இதனால் மக்கள் போஸ்ட் போடுவதை குறைத்துக் கொண்டு அதிகமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் காரணமாகவே நியூஸ் வெப்சைட்டுகளின் போஸ்டுகள் குறைவாக தென்படும்படி மாற்றப்படுகிறது.
|
என்ன நடக்கும்
இதனால் பேஸ்புக்கின் மூலம் பகிரப்படும் செய்திகளின் அளவு குறையும். அதே சமயம் மக்கள் தங்கள் வாழ்க்கை குறித்து அதிகம் எழுத ஆரம்பிப்பார்கள். மக்களை பேஸ்புக்கில் அதிகம் எழுத வைக்கவே இந்த திட்டம். பயனாளிகளை வெறும் வேடிக்கை பார்க்கும் நபர்களாக வைத்து இருக்க பேஸ்புக் விரும்பவில்லை.
தந்திரம்
இதற்கு பின் வியாபார தந்திரம் இருக்கிறது. விளம்பரம் மூலம் பேஸ்புக்கிற்கு வரும் காசை விட இதன் மூலம் அதிக பணம் வரும். அதிக யூசர்கள் அதிக போஸ்டுகள் போடுவதால் டிராபிக் அதிகம் ஆகும். இது பேஸ்புக்கிற்கு அதிக லாபத்தை கொடுக்கும். பேஸ்புக்கின் இந்த செயலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.