தவறாக பயன்படுத்தப்பட்ட ஃபேஸ்புக் தரவுகள்: மன்னிப்பு கோரினார் மார்க்
ஃபேஸ்புக் இழைத்த தவறால், அரசியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம், மில்லியன் கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக மார்க் சக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
"நம்பிக்கை மீறல் நடைபெற்றுள்ளது" என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க்.
இது குறித்து தான் "மிகவும் வருந்துவதாகவும்" "நேர்மையற்ற செயலிகளுக்கு" எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சின்என் தொலைக்காட்சியில் தெரிவித்திருந்தார் மார்க். இது சரிதான என நாடாளுமன்றத்தின் முன் சோதனை நடத்தவும் தான் "மகிழ்ச்சியுடன்" தயாராக இருப்பதாதவும் தெரிவித்தார்.
செயலிகள், பயனாளிகளின் தகவல்களை பெறுவது "மிக கடுமையாக்கப்படும்" எனவும் அவர் உறுதியளித்தார்.
"உங்கள் தகவல்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது; எங்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு சேவையாற்றும் தகுதியை நாங்கள் இழப்போம்" என்றார் மார்க் சக்கர்பர்க்.
"ஃபேஸ்புக்கை தொடங்கியது நான்தான் எனவே இதில் என்ன நடந்தாலும் நான்தான் பொறுப்பு" என்றும் அவர் தெரிவித்தார்.