கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவுக்கு அஞ்சலி - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை ஏற்பாடு
நியூயார்க்: கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்கு அமெரிக்காவில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக வட அமெரிக்க தமிழ்ச் சங்கப்பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:
மாதந்தோறும் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுக் கூட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை (06/11/17) இரவு கிழக்கு நேரம் 9:00 மணிக்கு. இந்த இலக்கியக் கூட்டத்தில் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகின்றோம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை வழங்கும்
இலக்கியச் சொற்பொழிவு
கவிக்கோ அப்துல் இரகுமான் மறைவு: அஞ்சலி உரை
சொற்பொழிவாளர்: பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர்
தேதி: 2017, ஜூன் மாதம் 11-ஆம் திகதி (06/11/2017)
நாள்: ஞாயிற்றுக்கிழமை
நேரம்: கிழக்கு நேரம் இரவு 9:00 மணி முதல் 10:00 மணிவரை
(கேள்வி நேரம்: 15 மணித்துளிகள்)
பல்வழி அழைப்பு (By Conference Call)
Dial-in Number: (641) 715-3670)
Access Code: 873905#
சொற்பொழிவாளர் பேராசிரியர் கவிமாமணி அப்துல் காதர் அவர்கள் வாணியம்பாடியிலிருந்து பல்வழி அழைப்பு வழியாக நம்முடன் பேசவிருக்கிறார். நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த இலக்கியக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து கொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.
பேரவை இலக்கியக்குழு
- இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.