For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து.. 19 பேர் பலி: 60 பேர் படுகாயம்

சீனாவில் இருக்கும் தனியார் கெமிக்கல் ஆலை ஒன்றில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

ஷாங்காய்: சீனாவில் இருக்கும் தனியார் கெமிக்கல் ஆலை ஒன்றில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த ஆலையில் வேலை பார்த்த 19 பேர் இதில் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

சீனாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சிச்சுவான் மாகாணத்தில் இருக்கும் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்து இருக்கிறது. இந்த ஆலையில் அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது.

Fire accident in China factory kills 19 people

இந்த தீ விபத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த 19 பேர் மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பெண். எல்லோரும் 25 வயதுக்குள் உள்ளவர்கள். அங்கு இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.

3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்த முயன்று வருகிறார்கள். இதில் காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.தீ விபத்து காரணமாக பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

English summary
The fire spread all over in China Chemical Factory today morning. 19 people died in the fire.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X