
வேணாம் விட்ருங்க! கணவரை கட்டிப்போட்டு கண்முன்னே.. 5 பேர்! கதறிய கர்ப்பிணி பெண்! பாகிஸ்தானில் பகீர்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் கர்ப்பிணிப் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் உள்ள ஜீலம் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கும் இளம் பெண் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அந்த இளம் பெண் கருவுற்றுள்ளார்.
இந்நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக, குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் வீட்டிற்குள் ஆயுதம் ஏந்திய 5 பேர் புகுந்து இரத்தத்தை உறைய வைக்கும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஷாக்! தெலுங்கானாவை உறைய வைத்த 'பென்ஸ் கார்’ பலாத்காரம்! அடுத்ததாக சிக்கிய டிஆர்எஸ் புள்ளியின் வாரிசு

பாகிஸ்தானில் அதிர்ச்சி
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, அப்பெண்ணின் வீட்டுக்கு பயங்கர ஆயுதங்களுடன் குற்றவாளிகள் பெண்ணின் கணவரை மிகக் கடுமையாகத் தாக்கி கயிற்றால் கட்டி வைத்துள்ளனர். பின்னர் கர்ப்பிணிப் பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து பஞ்சாப் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் பலாத்காரம்
இதுகுறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரியும் தடயவியல் பரிசோதனைக்காக லாகூர் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம் கராச்சி பெண் ஒருவர் ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் ரயிலில் 25 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெண்களின் உரிமைகள் தொடர்பான பாகிஸ்தானின் மோசமான சாதனையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

தொடரும் கொடூரம்
இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருந்த பெண்ணை டிக்கெட் பரிசோதகர் உட்பட மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கராச்சியில் இருந்து முல்தானுக்கு கடந்த வாரம் அவர் பயணம் செய்து கொண்டிருந்தார் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சகத்தை மேற்கோள்காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. ஆண்கள் அவளை ஏர் கண்டிஷனிங் கொண்ட வண்டிக்கு செல்லச் சொன்னதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது.

குடும்பக் கௌரவம் என அத்துமீறல்
பிப்ரவரியில் பஞ்சாப் தகவல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தரவுகள், மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் "குடும்பக் கௌரவம்" என்ற பெயரில் மொத்தம் 2,439 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், 90 பேர் கொல்லப்பட்டதாகவும் காட்டுகிறது. கடந்த ஆண்டின் 'உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021' இன் படி, பாலின சமத்துவக் குறியீட்டில் 156 நாடுகளில் பாகிஸ்தான் 153 வது இடத்தைப் பிடித்துள்ளது, அதாவது கடைசி நான்கு நாடுகளில்.

அதிகரிக்கும் குற்றங்கள்
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCP) சமீபத்திய அறிக்கை, பாகிஸ்தானில், கடந்த ஆறு ஆண்டுகளில் (2015-21) 22,000க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள், பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டுவதன் மூலம் குற்றவாளிகளுக்கு சமூகம் தேவையற்ற நன்மைகளை வழங்குகிறது என்று அறிக்கை கூறுகிறது. வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்திற்கும் குறைவான தண்டனை விகிதத்துடன் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது.22,000 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 77 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் மற்றும் தண்டனை விகிதம் 0.3 சதவிகிதம்" என்று அறிக்கை கூறுகிறது.