அமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோரில் வீடு ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகின. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பால்டிமோரில் உள்ளூர் நேரப்படி இன்று காலையில் வீடு ஒன்றில் இருந்து பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் இருந்த 5 வீடுகள் அடுத்தடுத்து வெடிவிபத்தில் சிக்கி தரைமட்டமாகின.
உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதில் ஒரு பெண் உயிரிழந்தார்
வேலை இல்லையா? கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே!
இதனிடையே வீடுகளின் இடிபாடுகளிடையே குழந்தைகள் உள்ளிட்ட மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.