அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 5 பேர் பலி.. 5 போலீஸார் காயம்
இலினாய்ஸ்: அமெரிக்காவின் இலினாய்ஸில் வேர்ஹவுஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர்.
இலினாய்ஸில் உள்ள தொழிற்பேட்டையில் ஊழியராக பணிபுரிந்து வந்தவர் கேரி மார்டின் (45). சிகாகோ பகுதியிலிருந்து 80 கி.மீ. தூரம் கொண்ட அரோராவில் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் 5 பேர் பலியாகிவிட்டனர். 5 போலீஸார் காயமடைந்தனர். இதையடுத்து கேரி மார்ட்டினை போலீஸார் சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பகுதி யாரும் செல்லாத அளவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த போலீஸார் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
DEADLY SHOOTING SPREE: At least five people are dead and several police officers were wounded during an active shooter situation at a warehouse in Aurora, Illinois. The gunman was killed by responding police officers. @perezreports. https://t.co/ElPAstlmBG pic.twitter.com/4ve1QUy0EZ
— World News Tonight (@ABCWorldNews) February 16, 2019