For Daily Alerts
Just In
மலேசியாவில் இலங்கை தூதர் முகத்தில் சரமாரி குத்துவிட்ட தமிழர்கள்- பரபரப்பான வீடியோ
கோலாலம்பூர்: மலேசியாவில் இலங்கை தூதர் இப்ராகிம் அன்சர் சரமாரியாகத் தாக்கப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக 5 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே கோலாலம்பூர் வருகை தந்திருந்தார். அவரது வருகைக்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே மலேசியாவுக்கான இலங்கை தூதர் இப்ராகிம் அன்சார், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் தினேஷ் குணவர்தனேவை சந்திப்பதற்காக கோலாலம்பூர் விமான நிலையத்துக்கு வந்தார்.
அப்போது அவரை சுற்றி வளைத்த தமிழர்கள் முகத்தில் சரமாரி குத்துவிட்டு பலமாகத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அன்சாரைத் தாக்கிய 5 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments
malaysia tamils sri lanka rajapaksa protest erwadi attack மலேசியா தமிழர்கள் இலங்கை ராஜபக்சே போராட்டம் தூதர் தாக்குதல்
English summary
Five Tamils have been arrested over the assault on Sri Lanka’s High Commissioner in Malaysia, Ibrahim Sahib Ansar, at the Kuala Lumpur International Airport (KLIA) on Sunday.
Story first published: Tuesday, September 6, 2016, 8:34 [IST]