மாயமான விமானம்: பிளைட் என்ஜினியர் மீது சந்தேகம்
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் என்ஜினியர் முகமது கைருல் அம்ரி சலாமத்(29) மீது விசாரணையாளர்களின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது.
மாயமான மலேசிய விமானத்தில் விமான என்ஜினியரான அதாவது விமான போக்குவரத்து என்ஜினியரான முகமது கைருல் அம்ரி சலாமாத்(29) பயணம் செய்துள்ளார். விமானம் பற்றி நன்றாக தெரிந்த ஒருவர் தான் அதை வேறு பாதையில் செலுத்தி இருக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பு சிஸ்டம்களை சுவிட்ச் ஆப் செய்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானத்தின் என்ஜினியர் சலாமத் மீது விசாரணையாளர்களின் சந்தேப் பார்வை விழுந்துள்ளது.
இது குறித்து சலாமத்தின் தந்தை உமர் கூறுகையில்,
ஒரு குழந்தைக்கு தந்தையான சலாமத் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விமான என்ஜினியராக உள்ளார். அவருக்கும், விமானம் மாயமானதற்கும் தொடர்பு இருக்காது. என் மகன் சிறப்பாக பணியாற்றி வந்தார். அவர் நல்ல மகனாக இருந்தார். மாதத்தில் ஒரு முறையாவது எங்களை வந்து பார்ப்பார் என்றார்.