டூ-பீஸில் துள்ளலாக வந்த பெண்.. தடை போட்ட போலீஸ்.. டிரஸ் போட்டுக்கவே முடியாது என அடம்!
மாலத்தீவில் பிகினி உடையுடன் நடமாடிய பெண் கைது செய்யப்பட்டார்
மாலத்தீவு: "முடியாதுன்னா முடியாது.. டிரஸ் போட்டுக்கவே முடியாது" என்று இளம் பெண் போலீஸ்காரரிடம் தகராறு செய்து அமர்க்களம் செய்து விட்டார்.
மாலத்தீவில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. வழக்கமாக சுற்றுலா இடங்களில், அதுவும் ரிசார்ட் பகுதிகளில் பிகினி அணிய அனுமதி உண்டு.. இருந்தாலும் சில ரிசார்ட்களில் அதற்கு அனுமதி இல்லையாம்.. அப்படி அனுமதி இல்லாத ஒரு பகுதியில் ஒரு இளம்பெண் பிகினி அணிந்து நடமாடி உள்ளார்..
மாஃபுஷி ஒரு பெண் இங்கு சுற்றுலா வந்துள்ளார்.. பிகினி உடையில் டூ பீஸ் அணிந்து கொண்டு நடமாடி இருக்கிறார்.. அதை பார்த்ததும் அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக 3 போலீசார் அங்கு விரைந்து வந்து கைது செய்ய முயன்றனர்.
ஆனால், அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்தார்... 3 போலீஸ்காரருடன் எதிர்த்து போராடுகிறார்.. இதை அங்கிருந்த மக்கள் எல்லோருமே வேடிக்கை பார்த்தனர்.. 3 போலீசாரும் அந்த பெண்ணிடம் டிரஸ் தந்து போடுமாறு சொல்கிறார்கள்.. ஆனாலும் அவர் அதை அணிய மறுத்தார். உடனே ஒரு போலீஸ்காரர் ஒரு டவல் எடுத்து அந்தபெண்ணின் உடலை மூடினார்.
மதுபோதையில் அந்த பெண் இருந்ததாக தெரிகிறது.. பிரிட்டிஷ் உச்சரிப்புடன் பேசகிறார்.. போலீஸ்காரர்கள் அவரை அழைத்து செல்லும் போது, "நீங்கள் என்னை பலாத்காரம் செய்கிறீர்கள்" என்று கத்தி கூச்சல் போட்டார். இதையடுத்து ஒருவழியாக அவரை போலீசார் கைது செய்தனர். இதனை அங்கிருந்த பயணி யாரோ வீடியோ எடுத்துவிடவும், இது வைரலாகிவிட்டது.
இஸ்லாமிய நாட்டின் காவல்துறை தலைவர் இந்த வீடியோவை பார்த்து மன்னிப்பு கோரியுள்ளார். இது சம்பந்தமாக போலீஸ் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஒரு பெண் சுற்றுலா பயணியை எங்கள் அதிகாரிகள் தடுத்த சம்பவம் மோசமாக கையாளப்படுவதாக தெரிகிறது.. சுற்றுலா மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார். இந்த வீடியோ இன்னமும் வைரலாகி வருகிறது.