ஏலியன்ஸ் என்னை கடத்தி நிலாவில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்தனர்: மாஜி யு.எஸ். விமானப்படை ஊழியை
வாஷிங்டன்: வேற்று கிரகவாசிகள் தன்னை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் அமெரிக்க விமானப்படை ஊழியை நியாரா டெரலா இஸ்லீ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விமானப் படையில் ரேடார் டிராபிக்கிங் ஆபரேட்டராக இருந்தவர் நியாரா டெரலா இஸ்லீ(60). நெவேடாவில் உள்ள விமானப்படை தளத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் கொலரடோ மாநிலத்தில் வசித்து வருகிறார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
1980களில் எனக்கு 25 வயது இருக்கையில் வால் உள்ள ஊர்ந்து செல்லும் வேற்று கிரகவாசிகளால் நான் கடத்தப்பட்டேன். அவர்கள் 7 மாத இடைவெளியில் என்னை 8 முதல் 10 முறை கடத்தி நிலாவுக்கு கொண்டு சென்றனர்.
என்னை நிலாவில் வைத்து அவர்கள் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தனர். தினமும் இரவு என்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். இரவு நேரத்தில் என்னை தூங்க விடாமல் ஒருவர் மாற்றி ஒருவர் பலாத்காரம் செய்தனர்.
என் குழந்தையிடம் திரும்பி வர வேண்டும் என்பதால் அவர்கள் செய்ததை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். நான் எதிர்ப்பு தெரிவித்தால் எங்கே என்னை கொன்றுவிடுவார்களோ என பயந்தேன்.
ஹிப்னாசிஸ் செய்த பிறகே இவை அனைத்தும் எனக்கு நினைவுக்கு வந்தது என்றார்.