போர்ப்ஸ் மேகசினின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 4 இந்தியர்களுக்கு இடம்
நியூயார்க்: அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஆண்டுதோரும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. 12 ஆவது ஆண்டு பட்டியலில் முதல் இடத்தில் ஜெர்மனியின் அதிபர் அங்கேலா மேர்க்கெலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள ஹிலாரி கிளிண்டன் இரண்டாம் இடத்திலும், மூன்றாவது இடத்தில் மெலிண்டா கேட்சும் உள்ளனர்.
இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.பி.ஐ. தலைமை செயல் அதிகாரி அருந்ததி பட்டாச்சார்யா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், பயோகான் நிறுவனர் கிரண் மாஷுந்தார் ஷா மற்றும் எச்.டி. மீடியா தலைவர் ஷோபனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த பெப்சி தலைமை அதிகாரி இந்திரா நூயி மற்றும் சிஸ்கோ தலைமை தொழில்நுட்ப அதிகாரி பத்மஸ்ரீ வாரியர் ஆகிய இரண்டு பெண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.