நம்மூர்ல நாய் பண்ற வேலைய ஜெர்மனில ஒரு நரி பண்ணி இருக்கு.. டோரோ ‘அப்டி’ கத்துறது தப்பேயில்ல!
ஜெர்மனியில் ஷூ திருடும் நரியின் செயல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெர்லின்: ஜெர்மனியில் இரவு நேரங்களில் வீட்டு வாசல்களில் இருந்த ஷூக்களைத் திருடிச் சென்ற திருடன் யாரென்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர் மக்கள்.
ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் மாயமாகின. மற்ற அனைத்துப் பொருட்களும் அப்படியே பத்திரமாக இருக்க, ஷூக்களை மட்டும் திருடிச் செல்வது யார் என அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். கிட்டத்தட்ட நூறுக்கும் அதிகமான ஷூக்கள் திருடு போயின.
இதனால் எப்படியும் ஷூ திருடனைப் பிடித்தே ஆக வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர். அவர்களது தீவிர கண்காணிப்பில் ஒருநாள் திருடன் அகப்பட்டான். கையும் களவுமாக.. இல்லையில்லை வாயும் களவுமாக திருடனைப் பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் ஷூக்களை திருடிச் சென்றது மனிதனல்ல.. ஒரு நரி. பிறகு அதைப் பிடித்து போலீசிலா கொடுக்க முடியும்.
சத்தமில்லாமல் அந்த நரியைப் பின் தொடர்ந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, அது திருடிச் சென்ற ஷூக்களைப் பதுக்கி வைத்திருந்த இடத்தை அப்பகுதி அவர்கள் கண்டுபிடித்து விட்டனர். ஷூக்களைப் பறி கொடுத்தவர்கள் மீண்டும் தங்களது ஷூக்களைத் திரும்ப எடுத்துச் சென்றனர். ஆனால் காணாமல் போனதில் ஒரு ஷூ மட்டும் கிடைக்கவில்லையாம்.
அடுத்த வீட்டில் அவமானப்பட்டு டிவி பார்த்த வலி தெரியுமா.. கண்ணீர் துடைத்தது கருணாநிதிதானே!
நம்மூரில் வீட்டு வாசலில் கழட்டி வைக்கும் செருப்புகளில் ஒன்றை நாய் தூக்கி சென்று விடுவது வழக்கம்தான். ஆனால் நாய் கூட ஒரு செருப்பைத் தான் தூக்கிச் செல்லும். ஆனால் இந்த நரியோ சரியாக ஜோடியாக ஷூக்களைத் திருடிச் சென்றதுதான் அப்பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூனில் டோரா கத்துவது போல.. 'குள்ளநரி திருடக் கூடாது.. குள்ளநரி திருடக் கூடாது' என்பது தான் தற்போது அங்குள்ள மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.