மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் தற்கொலை.. ரமலான் மாதத்தில் அசம்பாவிதம்
மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரியாத்: மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரெஞ்சு நாட்டவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. வருடம்தோறும் இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் புனித பயணம் மேற்கொள்ளுவார்கள். முக்கியமாக ரமலான் மாதத்தில் அதிக பேர் பயணம் செய்வார்கள்.
இந்த நிலையில் நேற்று, மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெயர் வெளியிடப்படவில்லை.
இவர் தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர் பிரெஞ்சு நாட்டவர் என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றிவரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே விழுந்த மாத்திரத்தில் சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரித்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.