ஜீலை 25-ம் தேதி பாகிஸ்தான் பொதுத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் மூலம் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமர் ஒருவர் செயல்படுவார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த தேர்தலில் பல முக்கியமான நபர்கள் போட்டியிட இருக்கிறார்கள்.
அந்த நாட்டில் மொத்தம் 100 மில்லியன் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 59.2 மில்லியன் ஆண் வாக்காளர்களும், 46.7 மில்லியன் பெண் வாக்காளர்களும் உள்ளனர். இம்ரான் கான், தற்போதைய பிரதமர் அப்பாஸி, அந்நாட்டின் முக்கிய வேட்பாளரான பிலாவால் போட்டியிட உள்ளனர்.
அந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக ஆட்சி நடக்க தொடங்கிய பின் பெரிய அளவில் வளர்ச்சி கண்டு இருக்கிறது. அதனால் தற்போது இந்த தேர்தல் மிக முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.