For Daily Alerts
Just In
பாகிஸ்தான் ஹோட்டலில் ஜெனரேட்டர் வெடித்து விபத்து.. சாப்பிட வந்த 7 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் லாகூரில் நிகழ்ந்த ஒரு உணவகத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்ததில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
லாகூர்: பாகிஸ்தானின் லாகூரில் அந்நாட்டு பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான இடத்தில் இருந்த உணவகத்தில் இருந்த ஜெனரேட்டர் வெடித்து 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
லாகூரில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான உணவு விடுதியில் இருந்த ஜெனரேட்டர் இன்று பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த உணவகத்தின் ஜன்னல்கள், வாகன நிறுத்துமிடத்தில் இருந்த வாகனங்கள், கட்டடங்கள் ஆகியன சேதமடைந்தன.
இந்த விபத்தில் 7 பேர் பலியாகிவுள்ளனர். மேலும் காயமடைந்த 18 பேர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த நாட்டின்பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அச்சம் அடைந்த அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.
Comments
English summary
Generator blasted in defence area of Pakistan's Lahore, 7 were died, 18 were injured.
Story first published: Thursday, February 23, 2017, 14:43 [IST]