ஜார்ஜியாவில் வெள்ளத்தின்போது தப்பித்து ஊருக்குள் புகுந்து ஒருவரை கொன்ற புலி
திபிலிசி: ஜார்ஜியா நட்டில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிச் சென்ற புலி ஒருவரை தாக்கி கொன்றுள்ளது.
ஜார்ஜியா நாட்டின் தலைநகரான திபிலிசியில் உள்ள வெர் ஆற்றில் கடந்த சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. இதில் தலைநகரில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருந்த விலங்குகள் பல பலியாகின. மேலும் பல விலங்குகள் பூங்காவில் இருந்து தப்பிச் சென்றன.
இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். பூங்காவில் இருந்து மாயமான சிங்கங்கள், புலிகள், கரடிகள் ஆகியவை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பூங்காவில் இருந்து தப்பிய புலி ஒன்று திபிலிசியில் ஒரு ஆணை கொன்றுள்ளது. முன்னதாக அவர் சிங்கத்தால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்த நபரை கொன்ற புலியை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே நீர்யானை ஒன்று மயக்க ஊசி போட்டு பூங்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.