பியூட்டிசியனின் அலட்சியம்... சுருள் முடியை இழந்து மொட்டைத் தலையான இளம்பெண்.. வைரல் வீடியோ!
பியூட்டிசியனின் அலட்சியத்தால்சுருள் முடியை இழந்து மொட்டை அடித்த ஒரு இளம் பெண்ணின் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Recommended Video
திபிலீசி: தலையலங்காரத்துக்காக பியூட்டி பார்லருக்குச் சென்ற பெண் தனது அழகான சுருள் முடியை இழந்து மொட்டைத் தலையான சோகக் கதை வீடியோ வைரலாகியுள்ளது.
ஜார்ஜியாவைச் சேர்ந்தவர் 20 வயதான அழகான இளம்பெண் சியரா பாயன்ஸ். இவரது அழகான சுருள் சுருளான முடிக்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்நிலையில் சமீபத்தில் சியரா, சிகையலங்காரம் செய்து கொள்வதற்காக பியூட்டி பார்லர் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு பியூட்டிசியன் அவரது முடியை சேர்த்து இறுக்கிக் கட்டியுள்ளார். இதனால் சியராவின் முடிக்கால்களில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதோடு முடிகள் அனைத்தும் கொத்துக் கொத்தாக கொட்டத் தொடங்கியுள்ளது.
ஆங்காங்கே முடிக் கொட்டி தனது தலை அசிங்கமாகிப் போனதால், வேறு வழியின்றி மொத்தத் தலையையும் மொட்டையடித்துக் கொண்டுள்ளார் சியரா. தனது அழகான சுருள் முடியை மொட்டையடித்த சோகத்தில் உள்ள சியரா, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனுபவமில்லாத பியூட்டிசியன்கள் உள்ள பியூட்டி பார்லருக்கு எப்பவும் செல்லாதீர்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய சேவை கிடைக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோ யூடியூப்பில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவைப் பார்த்துள்ளனர்.