உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியது- பாதிப்பு 45 லட்சத்தை நெருங்கியது
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் இதுவரை 2,98,059 பேர் கொரோனாவால் உலகநாடுகளில் மரணமடைந்துள்ளனர்.
Recommended Video
உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனாவால் மிக மோசமான உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதில் அமெரிக்காதான் பேரிழப்பை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 85,197 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 14,30,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகம். இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 33,186 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா மரணங்களில் 3-வது இடத்தில் இத்தாலி இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 31,106 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர்.
பிரேசில், ரஷ்யா, பெருவில் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு
4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 27,104 பேரும் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸில் 27,074 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரேசிலிலும் கொரோனா மரணங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தற்போதைய நிலையில் பிரேசிலில் மொத்தம் 13,158 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.