குடிபோதையில் கார் ஓட்டிய கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அதிரடி கைது
புளோரிடா: குடிபோதையில் கார் ஓட்டியதாக பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோல்ப் விளையாட்டில் ஒரு காலத்தில் மன்னாக திகழ்ந்தவர் டைகர் உட்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
பெண் விவகாரத்தி்ல் சிக்கி சீரழிந்து போய் குடும்பத்தை இழந்து, மனைவி, குழந்தையை இழந்து தரவரிசையில் ரொம்ப ரொம்ப கீழே போய் இருந்தார் டைகர் உட்ஸ்.
இந்நிலையில் குடிபோதையில் கார் ஓட்டிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் டைகர் உட்ஸ். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்றபோது புளோரிடா மாகாணத்தில் வைத்து டைகர் உட்ஸை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் சில மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் விடுவித்தனர்.
பல பெண்களுடன் தொடர்பு வைத்து பல்வேறு சர்ச்சையில் சிக்கிய டைகர் உட்ஸ் குடிபோதையில் வாகனம் ஓட்டி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.