கலிகாலம் டா! பேரனின் மூலம் தாயாகப் போகும் பாட்டி – இது அமெரிக்கா கூத்து
இண்டியானா: அமெரிக்காவில் பேரனின் குழந்தைக்கு தாயாக உள்ளார் பாட்டி ஒருவர்.இதனால் உறவுகளை மதிக்கும் பலர் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
அமெரிக்கா இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் பேர்ல் கார்டர். இவரது பேரன் பிய்ல் பெய்லி.
இருவரும் சேர்ந்து வாடகை தாய்மூலம் குழந்தை பெற்று கொள்ள உள்ளனர்.இதனால் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
பாட்டியும், பேரனும் காதல்:
இது குறித்து கார்ட்டர் , "எனது 26 வயது பேரனுடனான இந்த முறையற்ற காதலில் முதலில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. பின்னர் போக போக இந்தக் காதல் மகிழ்ச்சியாக மாறி விட்டது. எனக்கு அடுத்தவர்களுடைய கருத்தில் எந்த ஆர்வமும் இல்லை. நான் பிய்லை காதலிக்கிறேன். அவனும் என்னை காதலிக்கிறான்.
விரைவில் குழந்தை:
விரைவில் எனது கையில் மகள் அல்லது மகன் இருப்பார்கள். தந்தை என்ற நிலையில் பிய்ல் பெருமையடைவான்.என்று கூறி உள்ளார்.
தாயார் மரணம்:
பெய்லியின் தாய் லினெட்டெ பெய்லியை, கார்டர் தத்து எடுத்து வளர்த்தார். அவருக்கு பிறந்தவர்தான் பிய்ல் பெய்லி. ஆனால் லினெட்டெ பெய்லி மரணமடைந்து விட்டார்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை:
கார்டரின் கரு முட்டையையும், பெய்லியின் விந்தணுவையும் சேர்த்து வாடகை தாய் வயிற்றில் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்து உள்ளனர். இதற்காக ரோக்ஸ்சேனே கேம்பல் என்பவரை தேர்ந்து எடுத்து உள்ளனர். அவருக்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர் ஓப்பந்தம் பேசி உள்ளனர்.
அறிவான காதலர்கள்:
இதுபற்றி ரோக்ஸ்சேனே, "முதலில் எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் இருவரும் அறிவுப்பூர்வமான ஜோடி. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை பார்த்தேன்.அவர்கள் குழந்தையும் நேசிப்பார்கள் என தெரியும்" எனகூறினார்.