வேறு ஆண்களை நினைத்துக் கொண்டே உறவு கொள்ளும் பெண்கள்: ஆய்வில் அதிர்ச்சி
லண்டன்: இங்கிலாந்திலுள்ள பெண்களில் சுமார் பாதி பேர் ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டிருக்கும்போது வேறு ஒருவருடன் உறவு வைப்பதை போல மனதில் நினைத்து மகிழ்ச்சி கொள்வதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
அவர்களின் கனவில் பெரும்பாலும் வருவது, நெருங்கிய நண்பர்களோ அல்லது ஆபீசில் கூட வேலை பார்ப்பவர்களோதானாம். செக்ஸ் பொம்மைகள் தயாரிப்பு நிறுவனம், ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 1300 பேரிடம் கேட்டறிந்த இந்த தகவல் ஆண்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
பாதி பேர்
ஆய்வில் வெளியாகியுள்ள அதிர்ச்சி உண்மைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: கணவரோடோ, காதலனோடோ செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது, பெண்களில் 46 சதவீதம் பேர் வேறு ஒருவருடன் உடலுறவு கொள்வதை போன்று மனதளவில் (fantasize) நினைத்துக் கொள்கிறார்களாம். இதன்மூலம் கூடுதல் கிளுகிளுப்பு அவர்களுக்கு கிடைத்து செக்ஸ் சுகமான அனுபவமாக மாறுகிறதாம்.
ஆண்கள் கம்மிதான்
அதேநேரம், ஆண்கள் இந்த வகையில் பரவாயில்லை ரகம். ஏனெனில் 42 சதவீத ஆண்கள் இதுபோல பிற பெண்களை நினைத்து தங்கள் ஜோடியுடன் படுக்கையில் உல்லாசம் அனுபவிக்கிறார்கள். இது பெண்கள் விழுக்காட்டைவிட குறைவானதே. இருப்பினும் 40 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கற்பனையில் சுகம் காணுவதும் ஆபத்தான போக்காகும்.
ஆபீஸ்காரர்கள் அதிகம்
பெண்களை பொறுத்தளவில் இப்படி கனவில் வரும் மன்மதன்கள் பெரும்பாலும், நெருக்கமான தோழர்களாகவோ அல்லது, ஆபீசில் உடன் வேலை பார்க்கும் ஆண்களாகவோ இருக்கிறார்களாம். இப்படி மனதளவில் நினைக்கும் ஆண்களை எப்படியாவது வீழ்த்தி அவர்களுடனும் உறவு வைத்து தங்கள் ஆசையை பலரும் நிறைவேற்றியுள்ளனராம்.
ஆசை நிறைவேற்றம்
ஆபீசில் உடன் வேலை பார்ப்பவர்களை வீழ்த்தும் பெண்கள் 26 சதவீதமாகவும் ஆண்கள் 22 சதவீதமாகவும் இருக்கிறார்கள். கட்டிலில் யார் நினைவு அதிகம் வருகிறதோ, அவர்களை 26 சதவீத பெண்கள் தப்பாமல் வீழ்த்துவதும், ஆண்கள் 22 சதவீதம்தான் அதில் பாஸ் ஆவதும் தெரியவருகிறது. 5ல் ஒரு பெண்கள் தங்கள் முதலாளியுடன் உறவு வைத்துக்கொள்வதை போலவும், 8 சதவீத பெண்கள் மேனேஜருடன் உறவு கொள்வதைப் போலவும் நினைக்கிறார்கள் என்று நீளுகிறது இந்த ஆய்வு.