இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை நழுவவிட்டதா இங்கிலாந்து?
லண்டன்: இது இந்தியா-இங்கிலாந்து வாரம். இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை நழுவவிட்டதா இங்கிலாந்து?
குடியேற்றம் தொடர்பான இங்கிலாந்து அரசின் முடிவால் இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இந்தியாவின் வியாபாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இரண்டு ஆண்டுகளில் பலமுறை இங்கிலாந்துக்கு செல்லத் தேவையான விசாவுக்கு சீனர்களை விட நான்கு மடங்கு அதிக கட்டணம் செலுத்துகிறார்கள்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்த வேண்டுமானால் அரசு தனது குடியேற்ற கொள்கையை பெரிய அளவில் மாற்ற வேண்டும்.
இலவச வர்த்தக ஒப்பந்தம் என்பது வரி மட்டும் அல்ல, அது மக்களை பற்றியதும் கூட. இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதால் இந்தியா, இங்கிலாந்து இடையேயான உறவை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து-இந்தியா வாரம் இன்று துவங்குகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேச பல இந்திய தொழில் அதிபர்கள் இங்கு வந்து பேச உள்ளனர்.
வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் முடிவை இங்கிலாந்து தான் எடுக்க வேண்டும். ஜரோப்பாவின் நுழைவாயிலாக லண்டனை தான் பெரிதும் மதிக்கிறது இந்தியா.
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிய பிறகு இங்கிலாந்துக்கு இந்தியாவின் உறவு மிகவும் முக்கியம்.