மீண்டும் வெடித்த எரிமலை.. ஹவாயை மிரட்டும் தீக்குழம்பு.. ஊருக்குள் வந்த லாவா
அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது.
Recommended Video
ஹவாய்: அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மீண்டும் வெடித்துள்ளது. ஒரு வாரம் முன்பு முதல் முறையாக வெடித்த எரிமலை தற்போது மீண்டும் லாவா குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது.
இது மொத்தமாக வெடித்த காரணத்தால் மக்கள் அவர்கள் இருந்த பகுதியைவிட்டு வெளியேறினார்கள். இதற்காக அமெரிக்க அரசு மீட்பு படையை அனுப்பி இருந்தது.
மக்கள் வசிப்பிடத்தை நோக்கி இந்த எரிமலை குழம்புகள் வரும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் சில மக்கள் ஏற்கனவே அவர்கள் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருந்தார்கள். இதிலிருந்து தற்போது லாவாக்கள் வெடித்து வெளியே வந்துள்ளது.
என்ன வரலாறு
1975ல் இருந்தே இந்த தீவில் எரிமலை வெடிக்கும் நிலையில் இருந்தது. முக்கியமாக கிலாயூ என்ற எரிமலைதான் அதிக வீரியத்துடன் காணப்பட்டது. தற்போது இந்த எரிமலைதான் வெடித்துள்ளது. ஹவாய் தீவில் மிகவும் தீவிரமான நிலையில் வெடிக்கக்கூடிய வகையில் பல எரிமலைகள் இருக்கிறது. அந்த வகையில் கிலாயூ எரிமலை ஒரு வாரம் முன்பு வெடித்தது. மிகவும் மோசமான நிலையில் நெருப்பு குழம்புகளை கக்கிக் கொண்டு இருக்கிறது.
|
எவ்வளவு வெப்பம்
இந்த எரிமலையில் இருந்து வரும் லாவா குழம்புகள் மொத்தம் 1,093 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக கடந்த ஒரு வாரமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது அந்த நாட்டின் மொத்த இயற்கை சூழ்நிலையையே மாற்றிவிட்டதாக, அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இதனால்
எரிமலை வெடிப்பு காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருந்து முக்கால்வாசி கட்டிடங்கள் இதனால் பாதிக்கப்பட்டது. 100 க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. 2500 பேர் வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பலர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால் மீட்புபணி செய்ய முடியாததால், இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக வெளியிட முடியவில்லை.
நிலநடுக்கம்
இத்தனைக்கும் மத்தியில் அங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் சரியாக 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால் வீடுகளை காலி செய்து கொண்டு இருந்த மக்கள் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகினர்.இரண்டாவது நிலநடுக்கம் சரியாக 7.4 ரிக்டர் அளவில் பதிவானது. கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் ஆகும்.