ஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்!
வடகொரிய அதிபர் கிம்முக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஒரு எறும்பு கூட, இந்த பாதுகாப்பை மீறு உள்ளே நுழைய முடியாது.
சியோல்: அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு மிகப் பெரிய சிம்மசொப்பனமாக இருக்கும் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன், மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளார். சொந்த நாட்டில் கூட எங்கு சென்றாலும், ஒரு எறும்பு கூட நுழைய முடியாத அளவுக்கு அவருக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
வடக்கு கொரியா மற்றும் தெற்கு கொரியாவுக்கு இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம். நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னைகள், சண்டைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள், ஐநா சபை ஆகியவை எச்சரித்தும், தொடர்ந்து அணு ஆயுதங்களை தயாரித்து மிரட்டி வந்தது வடகொரியா.
வடகொரியவின் இந்த அணு ஆயுதகக் குவிப்பு பல நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வடக்கு கொரியா மற்றும் தெற்கு கொரியாவுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்தது. அதில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜேயின் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையை விட, கிம் ஜாங் உன்னுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பே மிகப் பெரிய விவாதமாக அமைந்துள்ளது. கோட்-சூட் அணிந்து கொண்டு, அதிபருக்கு பாதுகாப்பு அளித்த வீரர்கள் குறித்தே அதிகம் பேசப்படுகிறது. மிகவும் கடினமான தேர்வுகள் மூலம், அதிபரின் பாதுகாப்புப் படையினர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
துப்பாக்கிச் சுடுதலில் கன்னாகவும், உடல் தகுதியில் பிட்டாகவும், கிட்டத்தட்ட பாதுகாப்புப் படையில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு ஜேம்ஸ் பாண்ட், சூப்பர் மேன்கள். உன்னுக்கு ஆறு அடுக்கு பாதுகாப்பு வளையம் அளிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு வளையத்தை்த தாண்டி, ஒரு எறும்பால் கூட உள்ளே புக முடியாது. அமெரிக்கா உள்பட வேறு எந்த நாட்டு அதிபருக்கோ, பிரதமருக்கோ இந்த அளவுக்கு சிறந்த, விரிவான பாதுகாப்பு கிடையாது.
இது கிம் ஜாங் உன்னுக்கு மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தாருக்கும் இதுபோன்ற தீவிர பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக்கில், கிம்மின் சகோதரி கலந்து கொண்டார். போட்டியில் பங்கேற்ற வீரர்களின் எண்ணிக்கைவிட, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.