டெபாசிட் தொகைக்காக வாடிக்கையாளருக்கு விபச்சாரியை சப்ளை செய்த வங்கி!
வாஷிங்டன்: வாடிக்கையாளரை ஈர்ப்பதற்காக விபச்சாரியை பயன்படுத்திய வங்கி உயர் அதிகாரி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கோல்டுமேன் சேச் என்ற வங்கியின் உயர் அதிகாரி யூசுப் கப்பாஜ். லிபியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது கடாபியின் தலைமை அதிகாரி ஒருவரை ஈர்த்து தனது வங்கிக்கு ரூ.10 கோடி அளவிலான முதலீடு ஈட்ட எண்ணி உள்ளார்.
இதனை தொடர்ந்து ரஷ்ய நாட்டை சேர்ந்த பாலியல் தொழிலாளியான மெசிலா (25) என்பவரை தொடர்புக்கொண்டு விலை பேசி உள்ளார். விபச்சாரிக்கு, 5,00,000 பவுண்ட் என, கட்டணம் பேசி முடிவு செய்யப்பட்டதும், அவரை சொகுசு விமானத்தில் துபாய் அனுப்பி வைத்துள்ளார்.
துபாய் சென்ற மெசிலா, குறிப்பிட்ட அந்த வாடிக்கையாளருடன் ஜாலியாக இருந்து உள்ளார். இதன் மூலம் வங்கியில் அவர் மூலம் சுமார் 846 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
எனவே, விபச்சாரியை வைத்து, முறைகேடாக பெறப்பட்ட முதலீட்டை திருப்பி அளிக்க வேண்டும் என லிபியா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பாலியல் தொழிலாளியை அனுப்பி வைத்த யூசுப் கப்பாஜ் தற்போது லிபியா நாட்டிற்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட அந்த விபச்சாரியை நிருபர் ஒருவர் எப்படியோ தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் அளித்த பதில்தான் ஷாக் ரகம். அட போங்கப்பா.. நான் தினமும் 5 பேரை டீல் செய்கிறேன். 8 வருடத்தில் எத்தனை கஸ்டமரை பார்த்திருப்பேன். எத்தனை பேர் முகத்தைதான் ஞாபகம் வைக்க முடியும். இப்போது அந்த நபர் நேரில் வந்தால்கூட என்னால் அடையாளம் காண முடியாது என்று கூறியுள்ளாராம்.