குகையிலிருந்து கடைசியாக கோச் மீட்பு... தாய்லாந்தையே அதிர வைத்த ஹூயா ஹூயா சப்தம்
குகையிலிருந்து கடைசியாக கால்பந்து பயிற்சியாளரையும் வெற்றிகரமாக மீட்ட வீரர்களை ஆரவாரத்துடன் வரவேற்ற சக மீட்பு பணியாளர்கள்.
Recommended Video
பாங்காங்: குகையிலிருந்து கடைசியாக கால்பந்து பயிற்சியாளரையும் வெற்றிகரமாக மீட்ட ஸ்கூபா டைவிங் வீரர்களை உற்சாகமாக வரவேற்ற சக மீட்பு படையினர்.
தாய்லாந்தில் உள்ளது தாம்லுவாங் குகை. இது 10 கி.மீ. நீளம் கொண்டது. இங்கு பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்து கால்பந்து இளம் வீரர்கள் அவர்களது கோச் ஒருவருடன் ஜூன் 23- ஆம் தேதி சென்றனர்.
அப்போது விழா முடித்துவிட்டு திரும்பும் போது அங்கு கனமழை பெய்ததால் வெள்ளநீர் குகைக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் வெளியேற முடியாமல் போனது. இதையடுத்து கடந்த 8 -ஆம் தேதி பிரத்யேக ஸ்கூபா டைவிங் வீரர்கள் குகைக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து சென்றனர்.
கடந்த 3 நாட்களாக 12 சிறுவர்கள், ஒரு பயிற்சியாளரை மீட்டனர். நேற்றைய தினம் அனைவரும் மீட்கப்பட்டனர். அப்போது கடைசியாக பயிற்சியாளரை மீட்டு விட்டு வந்த வீரர்களை சக மீட்பு பணியாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
The moment!! #พาทีมหมูป่ากลับบ้าน #ThaiCaveRescue #หมอภาคย์ #ถ้ำหลวง #ThaiNavyseal pic.twitter.com/bHNezPoA6o
— Patta_991 (@Patta_991) July 10, 2018
ஹூயா ஹூயா என்ற சப்தம் தாய்லாந்து குகையே பிளக்கும் அளவுக்கு இருந்தது. இதனால் வீரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.