தெலுங்கு நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி.. திடுக்கிடும் வாக்குமூலம்
அமெரிக்காவை சேர்ந்த ஆந்திர தம்பதிகள், தெலுங்கு சினிமா நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
சிகாகோ: அமெரிக்காவை சேர்ந்த ஆந்திர தம்பதிகள், தெலுங்கு சினிமா நடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழில் செய்ய வைத்தது எப்படி என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க போலீஸ் விசாரணையில் அவர்கள் பல உண்மைகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவில், தெலுங்கு சினிமா நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த ஆந்திர தம்பதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.ஆந்திராவை சேர்ந்த கிஷான் மோடுகுமூடி மற்றும் சந்திரா ஆகிய இருவரும்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கிஷான் வியாபாரம் செய்து வருகிறார். அவர் மனைவி சந்திரா, கணவனின் வருமானத்தை சினிமாவில் முதலீடு செய்கிறார். தெலுங்கு சினிமாவில் இவர்கள் பல வருடமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
பாலியல் தொழில்
இவர்கள் அமெரிக்காவிற்கு சில தெலுங்கு நடிகைகளை அழைத்து வந்து பாலியல் தொழிலுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பாலியல் படங்கள் எடுக்கவும் அந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத நடிகைகளை இவர்கள் கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக அழைத்துவிட்டு, பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.
எப்படி நடத்தினார்கள்
இவர்கள் முதலில் வெளிநாட்டிற்கு ஷூட்டிங் வரும் தென்னிந்திய நடிகைகளிடம் வலை வீசி இருக்கிறார்கள். நேரடியாக பெரிய நடிகைகளிடம் பேச முடியாது என்பதால், சிறிய சிறிய நடிகைகளிடம் இவர்கள் பேசி, அவர்களை தங்கள் நிறுவன படங்களில் நடிக்க வேண்டும் என்றுள்ளனர். கடைசியில் அவர்கள் ஒப்புக்கொண்ட பின் சில நாட்களில் மனதை மாற்றி பாலியல் தொழில் இறங்க வைக்கிறார்கள்.
எல்லாம் பொய்
இவர்கள் இதற்காக உண்மையான சினிமா நிறுவனம் போலவே செயல்பட்டு இருக்கிறார்கள். இதற்காக, தெலுங்கில் சினிமா நிறுவனம் என்று பெயர் பதிந்து, அதனுடைய அமெரிக்க கிளை என்று அமெரிக்காவில் பதிந்து, பின் அந்த லெட்டர் பேட்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி இருக்கிறார்கள். இவ்வளவு வருடமாக யாருக்கும் தெரியாமல் இப்படித்தான் அவர்கள் பாலியல் தொழில் நடத்தி உள்ளனர்.
எத்தனை
பெரும்பாலும் முன்னணி நடிகைகள் யாரும் இவர்களின் வலையில் விழவில்லை. ஆனால் சில சிறிய நடிகைகள் வாய்ப்பிற்கு ஏங்கி, இவர்களிடம் ஏமாந்தது தெரிய வந்துள்ளது. கடந்த 3 வருடமாக இவர்கள் இது போன்ற மோசமான வேலையை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. போலீஸ் இப்போது இவர்களை விசாரித்து வருகிறது.