துபாயில் இந்து கோவில் எப்படி சாத்தியம் ஆனது?.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியது எப்படி?
துபாயில் இந்து கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
Recommended Video
ரியாத்: தற்போது இந்திய பிரதமர் மோடி மூன்று நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பாலஸ்தீனம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு அவர் இந்தப் பயணத்தில் செல்வார்.
இந்த மூன்று நாடுகளுமே அரசியல் ரீதியாக வெவ்வேறு கொள்கைகள் கொண்டது. துபாயில் நடக்கும் உலக நாடுகளின் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டார். அதேபோல் துபாய் இளவரசரின் அரண்மனைக்கும் செல்கிறார்.
இந்த நிலையில் தற்போது அங்கு இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். இதற்குப் பின் பெரிய வரலாறு இருக்கிறது.
எப்படி ஆரம்பித்தது
2015ம் ஆண்டுதான் முதல்முறையாகப் பிரதமர் மோடி துபாய்க்கு சென்றார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக அவர் துபாய் சென்றுள்ளார். அப்போது இந்து கோவிலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அல் வாதாப் என்ற இடத்தில் இந்தக் கோவில் கட்டப்பட உள்ளது.
கடவுள்கள்
இதில் கிருஷ்ணர், சிவன் மற்றும் அய்யப்பன் சிலைகள் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இன்னும் சில சிறிய சிறிய சிலைகளும் கோவிலில் வைக்கப்படவுள்ளது. இந்தக் கோவிலின் புகைப்படத்தை மோடி வெளியிட்டார்.
டெல்லி கோவில்
இந்தக் கோவில் டெல்லியில் இருக்கும் அக்ஷர்தாம் கோவில் போலவே வடிவமைக்கப்பட உள்ளது. அந்தக் கோவில் டெல்லியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாகும். அதன் கட்டிட கலையை காணவே பலர் அங்கு வந்து செல்வார்கள். அதனால அதேபோல் வடிவமைக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
|
முடியும்
இந்தக் கோவில் கட்டுமானம் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கோவில் கட்டிமுடிக்க 2020 ஆகும். அதேபோல் இந்தக் கோவிலுக்கு இந்துக்கள் மட்டும் இல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.