மிரட்டும் மாத்யூ.. அலறும் யுஎஸ்... 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் #hurricanemathew
பஹாமஸ்: அமெரிக்காவை மிரட்டிக் கொண்டிருக்கிறது மாத்யூ புயல். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றப்ட்டுள்ளனர்.
பஹாமஸில் இந்த புயல் தாக்கியுள்ளது. அதேபோல ஹைத்தி தீவையும் இந்த புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 22 பேர் உயிரிழந்தனர்.
மாத்யூ புயல் கடுமையாக இருக்கும் என்பதால் அமெரிக்காவின் தென் கிழக்குக் கடற்கரையையொட்டி வசிக்கும் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மக்கள் தயார் நிலையில் இருக்குமாறு புளோரிடா மாகாண ஆளுநரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜார்ஜியா, தெற்கு கரோலினா, புளோரிடா மாகாணங்களில் இந்த புயல் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. வியாழக்கிழமை மாலை புளோரிடாவை மாத்யூ தாக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெற்கு கரோலினா மாகாண ஆளுநர் நிக்கி ஹாலி கூறியுள்ளார்.
புளோரிடாவில் வசிக்கும் 7 லட்சம் பேர் பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜியாவில் 50,000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.