For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

48 மணிநேர மராத்தான் உறவு.. செப்டிக் ஆகி உயிரிழந்த மனைவி.. சிறை செல்லாமல் தப்பிய கணவர்!

ஜெர்மனியில் புது மணப்பெண்ணை தேனிலவு போன இடத்தில் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் கொடூர சுகம் அனுபவித்திருக்கிறான் கணவன். அந்த பெண்ணோ சீழ் பிடித்து உயிரை விட்டிருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    48 மணி நேரம் தொடர் உறவினால் உயிரிழந்த மனைவி..தப்பித்த கணவர்- வீடியோ

    ஜெர்மன்: மனைவியின் உறுப்பிற்குள் செக்ஸ் பொம்மையை சொருகி 48 மணிநேரம் தொடர் சுகம் அனுபவித்த நபரால் உயிரிழந்து விட்டார் அந்த புதுப்பெண். ஜெர்மனியில் புதுமணத்தம்பதியரின் ஹனிமூன் கசப்பான சோகம் ஒருபக்கம் இருக்க, மனைவியின் மரணத்திற்குக் காரணமான அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் தள்ளினர். வழக்கு விசாரணையில் மனைவியை அதிகம் நேசிக்கும் அந்த நபர் கொலை செய்யும் நோக்கத்தோடு அதை செய்யவில்லை, இது ஒரு விபத்து மரணம் என்று கூறி அந்த பெண்ணின் கணவரை நீதிபதி விடுவித்து விட்டார்.

    மேற்கு ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் நகரத்தில் குடியிருக்கும் ராலப் ஜன்கஸ் என்ற 52 வயதான நபருக்கு கணவனை இழந்த கிறிஸ்டல் மீது ஆசை. அந்த பெண்ணிற்கு 49 வயதாகிறது. 30 வயதில் ஒரு மகன் இருக்கிறார். வயதானாலும் குழந்தை மனம் கிறிஸ்டலுக்கு. அந்த பெண்ணின் வெகுளித்தனம்தான் ராலப்பிற்கு வசதியாக போனது. நட்பாக பழகி லிவ் இன் வாழ்க்கை நடத்தினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் முடிந்த அந்த தம்பதியர் ஆகஸ்ட் மாதம் தேனிலவுக்கு சென்றனர். அங்குதான் விபரீதம் அரங்கேறியது. ராலப்பிற்கு விபரீதமான ஒரு ஆசை உள்ளது. பெண்களை துன்புறுத்தி உறவு கொள்ளும் ஆசை உள்ளது. அதனை தனது புது மனைவியிடம் ஹனிமூனில் செயல்படுத்தினார்.

    ஹனிமூனில் விபரீதம்

    ஹனிமூனில் விபரீதம்

    வயதான குழந்தை போன்ற அந்த பெண்ணின் உறுப்பிற்குள் கூர்மையான பொம்மையை சொருகினார். அந்த பெண் வலியால் துடித்த போது இவர் சுகம் அனுபவித்தார். ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரமல்ல 48 மணிநேரம் தொடர்ந்து மராத்தான் உறவில் ஈடுபட்டனர் அந்த தம்பதியர்.

    உயிரிழந்த புதுப்பெண்

    உயிரிழந்த புதுப்பெண்

    இதில் கிறிஸ்டலின் உள் உறுப்புகளில் காயம் ஏற்பட்டு சீழ் பிடித்தது. ஆனால் சரியான சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை. இதில் கிறிஸ்டலின் உடல்நிலை மோசமாகவே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து மருத்துவமனையில் அனுமதித்தார் ராலப். ஆனாலும் நோயின் தீவிரம் அதிகரிக்கவே கிறிஸ்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கசப்பான ஹனிமூன்

    கசப்பான ஹனிமூன்

    பல ஆண்டுகள் ஒன்றாக லிவ் இன் வாழ்க்கை வாழ்ந்த போது மகிழ்ச்சியாக இருந்த அவர்கள் திருமணம் ஆகி சில நாட்களிலேயே கிறிஸ்டல் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது திருமணம் பற்றி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்த ராலப் தனது மனைவி திடீரென மரணமடைந்து விட்டதாக கூறியிருந்தார். எட்டு நாட்களில் தங்களின் மணவாழ்க்கை சோகத்தில் முடிந்ததாகவும் பதிவிட்டிருந்தார்.

    துன்புறுத்தி மரணம்

    துன்புறுத்தி மரணம்

    இதனால் பாதிக்கப்பட்ட கிறிஸ்டலின் 30 வயது மகன் ராலப் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஜெர்மன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    குழந்தை போன்ற தனது தயாரை ராலப் துன்புறுத்தியதால்தான் மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

    எதிர்பாராத மரணம்

    எதிர்பாராத மரணம்

    கிறிஸ்டல் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அந்தரங்க உறுப்பில் கூர்மையான பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு கோர்ட்டில் பதில் சொன்ன ராலப் தனக்கு பெண்ணை துன்புறுத்தி உறவு கொள்வது பிடிக்கும் என்று கூறினார். ஆனால் இந்த அளவிற்கு விபரீதத்தில் முடியும் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறினார். தான் தனது மனைவியை மிகவும் நேசிப்பதாகவும் கூறியிருந்தார்.

    நீதிபதி கருணை

    நீதிபதி கருணை

    ஜெர்மனியின் வடக்கு மாகாண நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை வாசித்த நீதிபதி ராலப் ஜன்கஸ்ஸை கடுமையாக சாடினார். தொடர் உறவினால் ஒரு பெண்ணின் உயிர் அநியாயமாக பறிபோனதே என்று கூறினார். ஆனாலும் ராலப் தனது மனைவியை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படவில்லை. காயம்பட்ட மனைவியை காப்பாற்ற நேரடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

    தண்டனை தேவையில்லை

    தண்டனை தேவையில்லை

    பாரன்சிக் ஸ்பெஷலிஸ்ட்களும் அந்த பெண்ணின் உடலில் சிக்கியிருந்த பொருளை பரிசோதனை செய்ததில் ராலாப் மீது எந்த தவறும் இல்லை எனறு கூறியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மகன் தரப்பில் இருந்து வாதாடிய வக்கீல், மூன்றரை ஆண்டுகாலம் தண்டனை தரவேண்டும் என்று வாதாடி உள்ளார். ஏற்கனவே மனைவியை இழந்து தவிக்கும் அந்த நபர் அதற்காக ஏழு மாத தண்டனை அனுபவித்து விட்டார். இனி இவருக்கு தண்டனை தரத்தேவையில்லை என்று கூறி நீதிபதிகள் ராலப் ஜன்கஸ்ஸை விடுதலை செய்தார்.

    English summary
    A husband who accidentally killed his new wife by inserting a spiked sex toy inside her during a 2 days BDSM session has been spared jail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X