துப்பாக்கிச்சூடு நடக்கையில் ஆர்லான்டோ கொலையாளிக்கு 'ஐ லவ் யூ' மெசேஜ் அனுப்பிய மனைவி
ஆர்லான்டோ: ஆர்லான்டோ கிளப்பில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கையில் உமர் தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி டிவியில் செய்தியை பார்த்தாயா என்று கேட்க அவர் பதிலுக்கு ஐ லவ் யூ என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஆர்லான்டோ நகரில் இருக்கும் பல்ஸ் என்ற ஓரினச்சேர்க்கையாளர் கிளப்புக்குள் புகுந்த உமர் மாட்டீன் கண்மூடித்தனமாக சுட்டதில் 50 பேர் பலியாகினர். மேலும் 50 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து அமெரிக்க மக்கள் இன்னும் மீளவில்லை.
மனைவி
உமர் அந்த கிளப்பை தாக்க திட்டமிட்டது அவரது மனைவி நூருக்கு தெரிந்தும் அவர் இது குறித்து போலீசில் தெரிவிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இதனால் நூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது.
உமர்
உமர் கிளப்புக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி நூர் அவருக்கு போன் செய்துள்ளார். டிவியில் செய்தியை பார்த்துவிட்டு அவர் உமரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
எஸ்.எம்.எஸ்.
நூர் போன் செய்தபோது உமர் அவரிடம் பேசவில்லை. மாறாக சிறிது நேரம் கழித்து அவர் தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். என்ன டிவியில் செய்தியை பார்த்துவிட்டு போன் செய்தாயா என எஸ்.எம்.எஸ்.ஸில் தெரிவித்திருந்தார்.
ஐ லவ் யூ
அரக்கத்தனமாக பலரை கொன்ற உமரிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்.ஸுக்கு நூர் பதில் அனுப்பியுள்ளார். பதில் எஸ்.எம்.எஸ்.ஸில் அவர் ஐ லவ் யூ என உமருக்கு காதல் தூது விட்டுள்ளார். இந்த தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.