கிம் கர்தஷியானை இனி யாரும் "காமத்தோடு" பார்க்காதீர்கள்.. கனிவோடு பாருங்க.. ஷுகர் வந்துருச்சாம்!
லாஸ் ஏஞ்சலெஸ்: ரியாலிட்டி ஸ்டார் கிம் கர்தஷியானுக்கு சர்க்கரை நோய் வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.
இதற்கான அறிகுறிகளை தான் உணர்வதாகவும், தனக்கு சர்க்கரை நோய் இருப்பதாக உணர்வதாகவும் கிம் கூறியுள்ளார்.
34 வயதாகும் அவர் இதுகுறித்த தனது அச்சத்தை தனது குடும்பத்தினரிடமும் தெரிவித்துள்ளார். கிம் குடும்பத்தினர் நடத்தும் கீப்பிங் அப் வித் தி கர்தஷியான் ரியாலிட்டி ஷோவின் போது தனது இந்த எண்ணத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டார் கிம்.
2வது முறையாக கர்ப்பம்
கிம் தற்போது 2வது முறையாக கர்ப்பமாக உள்ளார். அவருக்கு மகன் பிறப்பான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பரில் டெலிவரி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பிரவசத்தின்போது
கடந்த 2013ம் ஆண்டு மகள் நார்த் வெஸ்ட்டை பிரசவித்த சமயத்தில்தான் அவருக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதையடுத்து அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறார்.
பிரச்சினை அதிகரித்து விட்டதாம்
இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு preeclampsia வந்துள்ளதை முதல் பிரவசத்தின்போது டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இது வந்தால், நிச்சயம் அது சர்க்கரை வியாதியில்தான் போய் முடியும் என்றும் டாக்டர்கள் கூறினர். தற்போது பிரச்சினை அதிகரித்திருப்பதாக உணர்கிறேன் என்றார் கிம்.
தொப்புள் கொடியில் அதிக திரவம்
இதுகுறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனது தாயார் கிறிஸ் ஜென்னர், அக்கா கர்ட்னி கர்தஷியான் ஆகியோரிடம் கிம் கூறுகையில், எனது தொப்புள் கொடியில் வழக்கத்தை விட அதிக அளவில் திரவம் வருவது தெரிய வந்துள்ளது. இது சர்க்கரை நோய் இருந்தால்தான் வரும் என்றார் கிம்.
கிம் கூறியதைக் கேட்டு அவரது குடும்பத்தினரின் முகங்களும் கவலையில் மூழ்கின.