தேவைப்பட்டால் அணுகுண்டு வீசத் தயங்கமாட்டோம்.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் மறைமுக எச்சரிக்கை...
இஸ்லாமாபாத்: தேவை ஏற்பட்டால் இந்தியா மீது அணுகுண்டு வீசக் கூட தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் க்வாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்நாட்டின் பிரபல ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியா தங்கள் நாடு மீது மறைமுகமாக தீவிரவாத போர் தொடுத்துள்ளதாகக் கூறினார். அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் வைத்திருக்கவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பிற்காக அதனைப் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் க்வாஜா தெரிவித்தார்.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அணு ஆயுத எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது இந்த எச்சரிக்கை குறித்து கருத்து தெரிவித்த இந்தியாவின் முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் இந்தியாவும் அணு ஆயுதங்களை காட்சிப்பொருளாக வைத்திருக்காது என்றார்.