பிரேசில் கால்பந்து வீரர்களுடன் அப்பளம் போல நொறுங்கிய விமானம்.. வெளியானது போட்டோ!
ரியோநெக்ரோ: பிரேசில் நாட்டின் சபெகோன்சே உள்ளூர் கிளப் கால்பந்தாட்ட அணி வீரர்கள் உட்பட 72 பேர் இன்று பொலிவியாவிலிருந்து, கொலம்பியாவின் ரியோநெக்ரோ நகருக்கு விமானத்தில் பயணித்தனர்.
Primeras imágenes del avión siniestrado en donde se transportaban los jugadores de Chapecoense pic.twitter.com/xMIGbtKfSp
— Andres Felipe Arcos (@AndresFelipe) November 29, 2016
இந்நிலையில், கொலம்பிய நேரப்படி இரவு 10.15 மணியளவில் அந்த நாட்டு வான் எல்லையில் வைத்து அந்த விமானம் நொறுங்கி விழுந்தது. சம்பவ இடத்திலிருந்து சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்பளம் போல நொறுங்கி கிடக்கும் விமான போட்டோ ஒன்று, கொலம்பியா நாட்டுக்காரர் ஒருவரால் டிவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும்போது, விமானத்தில் பயணித்த பெரும்பாலானோர் உயிரிழந்திருக்கலாம் என்ற ஐயம் எழவே அதிக வாய்ப்புள்ளது. அந்த படத்தை நீங்களே பாருங்கள்.