For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாதான் காரணம்.. நேபாளத்திற்கு ஆதரவாக களமிறங்கும் இம்ரான் கான்.. மூன்று நாடுகளின் பகீர் வியூகம்!

Google Oneindia Tamil News

காத்மண்டு: நேபாளத்தின் பிரதமர் கே பி சர்மாவின் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் சர்மாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Nepal- க்கு ஆதரவாக களமிறங்கும் Pakistan... 3 நாடுகளின் பகீர் வியூகம்?

    இந்தியாவிற்கு எதிராக நேபாளம் வரைபடம் வெளியிட்டதில் இருந்தே நேபாளத்தில் அந்நாட்டு பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக குரல்கள் எழ தொடங்கி உள்ளது. இந்தியாவில் பீகார் அருகே இருக்கும் லீபுலேக், கல்பாணி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்து நேபாளம் வரைபடம் வெளியிட்டது.

    நேபாளத்தின் இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தது. அதேபோல் அந்த நாட்டை சேர்ந்த ஆளும் கட்சியை சேர்ந்த தலைவர்களே பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

    நேபாள பிரதமருக்கு எதிராக எழும் கலக குரல்கள்.. பின்னணியில் 'பழைய ஹீரோ' பிரச்சண்டா.. செம திருப்பம்நேபாள பிரதமருக்கு எதிராக எழும் கலக குரல்கள்.. பின்னணியில் 'பழைய ஹீரோ' பிரச்சண்டா.. செம திருப்பம்

    என்ன புரட்சி

    என்ன புரட்சி

    இந்த நிலையில் நேபாளத்தில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க திட்டமிடுகிறார்கள். உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து என்னுடைய ஆட்சியை கவிழ்க்க இந்தியா திட்டம் போடுகிறது. இந்தியாவிற்கு எதிராக மேப் வெளியிட்டதால் இந்தியா எனது ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறது. இந்தியாவின் இந்த சதியை முறியடிப்பேன் என்று பிரதமர் கேபி சர்மா குறிப்பிட்டு இருந்தார். இந்தியாவிற்கு எதிராக அப்பட்டமான குற்றச்சாட்டை அவர் வைத்து இருந்தார். இந்த நிலையில் இன்று ஆளும் கட்சியான நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடந்தது.

    பதவி விலக கோரிக்கை

    பதவி விலக கோரிக்கை

    இன்று நடந்த கூட்டத்தில் பிரதமர் கேபி சர்மாவிற்கு எதிராக அந்த கட்சியின் மூத்த உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள் கடுமையாக குரல் எழுப்பினார்கள். பிரதமர் கேபி சர்மா கண்டிப்பாக பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் .கட்சியின் மூத்த தலைவர்கள் புஷ்ப கமல் தாஹல் பிரச்சந்தா, மாதவ் குமார், ஜல்நாத் காணல் ஆகியோர் அரசுக்கு எதிராக குதித்துள்ளனர். கட்சி தலைவர், ஆட்சி தலைவர் இரண்டு பதவியிலும் சர்மா இருக்க கூடாது என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    பெரும் குழப்பம்

    பெரும் குழப்பம்

    இதனால் பிரதமர் கேபி சர்மா என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறார். நேபாளத்தின் பிரதமர் கே பி சர்மாவின் ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் சர்மாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரதமர் கே பி சர்மாவிற்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தருவதாக இம்ரான் கான் தெரிவித்து இருக்கிறார். நேபாளத்தில் ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்கிறது.

    ஆட்சி கவிழும்

    ஆட்சி கவிழும்

    அங்கு ஆட்சியை கவிழ பாகிஸ்தான் விடாது. நாங்கள் பிரதமர் கே பி சர்மாவிற்கு முழு ஆதரவு தருகிறோம் என்று இம்ரான் கான் ஆதரவை தெரிவித்துள்ளார். பிரதமர் கே பி சர்மா உடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு எதிராக நேபாளம் செயல்படும் நிலையில் தற்போது நேபாளத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்துள்ளார்.

    சீனாவின் தொடர்பு

    சீனாவின் தொடர்பு

    ஏற்கனவே நேபாளத்தின் அரசுக்கு சீனா தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் நேபாளத்திற்கு பின் இருந்து சீனாதான் இயக்குகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் தற்போது நேபாளத்தின் பிரதமர் சர்மாவிற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக எல்லையில் உள்ள மூன்று நாடுகள் மோசமான வியூகங்களை வகுக்க தொடங்கி உள்ளது.

    English summary
    Pakistan PM Imran Khan supports Nepal PM Oli amid Chinas standoff with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X